Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு முகாம்கள்: மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ்

ஏப்ரல் 29, 2021 12:21

கும்பகோணம்: கும்பகோணத்தில் கொரோனா நோய் தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் 

கும்பகோணத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா  நோய் தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு  அமைக்கப்பட்டுள்ள முகாமினை  மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், வருகின்ற இரண்டாம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பூத் ஏஜெண்டுகள் ஆகியோர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் விதமாக தொகுதிவாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 60 சதவீதத்தினர் பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் இன்று பரிசோதனை மேற்கொள்வார்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஏஜென்டுகள்  பத்திரிக்கையாளர்கள் செல்வதற்கான வழிகள் குறித்தும் அவர்களுக்கு முக கவசம் சனிடைசர்  உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றும் , கடந்த தேர்தலை விட தற்போது அதே சமயத்தில் கூடுதலாக ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி முதல் அலையை எப்படி பின்பற்றினார்கள் அதே போன்று இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தலைப்புச்செய்திகள்